காளை காளை.. ஒரே நாளில் 240 காளைகள் புக்கிங்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு!
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்குத் தயாராகி வருகிறது. ஜனவரி 16ம் தேதி இங்கு உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு எனப்படும் வீர விளையாட்டு நடைபெறவுள்ளது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் காளைகளை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் 230 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அலங்காநல்லூர், கோட்டை முனியசாமி திடலில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே திடலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போட்டி நடைபெறவுள்ளது.

மதுரை.. தேனி.. திண்டுக்கல்..
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வழக்கம் போல இந்த ஆண்டும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, வேலூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காளைகள் பங்கேற்கவுள்ளன.

வரிசையில் நின்று பதிவு
இதற்கான காளைகள் பதிவு அலங்காநல்லூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் நடந்தது. இதற்காக வந்திருந்த காளைகளின் உரிமையாளர்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர்.

ஏகப்பட்ட டெஸ்டிங்
உச்சநீதிமன்றத்தின் சமீப கால கிடுக்கிப் பிடி உத்தரவுகள் காரணமாக பல்வேறு விதிமுறைகள் காளைகளுக்கும், போட்டிக்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத் துறை மருத்துவர்களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர் காளை உரிமையார்கள்.

600 காளைகள் வரை வரும்
கடந்த அண்டு 519 காளைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 27 காளைகள் சரியில்லை என்று கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 600 காளைகள் வரை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டோக்கன்படிதான் சாமி விடுவோம்
இந்த ஆண்டு காளைகளுக்கு டோக்கன் தரப்படும். அதன் பிரகாரம்தான் காளைகள் அவிழ்த்து விடப்படும். எனவே டோக்கன் பெற்ற அத்தனை காளைகளுக்கும் ஜல்லிக்கட்டில் களம் புக வாய்ப்பு கிடைக்கும்.

8 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 2 மணி வரை
ஜல்லிக்கட்டு, ஜனவரி 16ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் கோவில் காளை விடப்படும். பின்னர் வரிசையாக மற்ற காளைகள் திறந்து விடப்படும். பிற்பகல் 2 மணி வரை இடைவிடாமல் போட்டி நடைபெறும்.
போட்டிக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications