கோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் மூதாட்டி பிணம்- கொலையா?
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே எரிந்த நிலையில் மூதாட்டி பிணம் ஒன்று கிடைத்ததை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் அருகே காட்டுப் பகுதியில் எறிந்த நிலையில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் எரிந்த நிலையில் கிடந்த பெண் அப்பகுதியை சேர்ந்த கொம்புத்தேவர் மனைவி சுப்பம்மாள் என்பதும் அவருக்கு வயது 60 இருக்கும் என்றும் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் நேற்றுமுதல் அவர் காணமல் போனதாகவும் இன்று எறிந்த நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
அந்தப் பகுதியில் தீப்பெட்டி,மண்ணெண்ணை கேன்,உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.சுப்பம்மாவை யார் எதற்காக எரிந்து கொன்றனர் என்று கோவில்பட்டி கிழக்கு பாகம் காவல்துறையினர் தீவீர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் கோவில் பட்டி பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications