தமிழக அரசு பேருந்து கண்டக்டருக்கு சரமாரி கத்தி குத்து.. கேரள பயணிகள் வெறிச்செயல்!
Subscribe to Oneindia Tamil
கம்பம்: கேரளா மாநிலத்தில் பயணிகள் - நடத்துனர் இடையே ஏற்பட்ட தகராறில் தமிழக அரசு பேருந்து நடத்துனரை கேரள பயணிகள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சாஸ்தான் ஓடையில் இருந்து கம்பம் வந்த அரசு பேருந்தில் இருந்த பயணிகள்-நடத்துனர் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் வல்லியந்தடம் என்ற இடத்தில் நடத்துனரை கேரள பயணிகள் கத்தியால் சரமாரியாக தாக்கினர்.

இதில். படுகாயமடைந்த நடத்துனர் முனிசாமி என்பவர் குமுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக, கேரளா பேருந்து ஓட்டுநர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications