5வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்.. எப்போது தீர்வு கிடைக்கும்?
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழகம் முழுக்க பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து ஊழியர்களின் இந்த போராட்டம் 5வது இன்றும் நாளாக தொடர்கிறது.
ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுக்க தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே தற்காலிக போக்குவரத்து பணியாளர்கள் சில மோசமான விபத்துக்களை இந்த நான்கு நாட்களில் ஏற்படுத்திவிட்டனர். இந்த நிலையில் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் மொத்தமும் முடங்கி இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை முழுக்க 70% பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் 80% பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இன்னும் இந்த பிரச்சனையில் தீர்வு எட்டப்படாததால் இன்று முழுக்க போராட்டம் தொடரும் என்று கூறப்படுகிறது. பொங்கலுக்கு முன் போராட்டம் கைவிடப்படுமா, தீர்வு கிடைக்குமா என்று மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications