தமிழகத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து 2வது நாளாக நேற்றும் முடக்கம்
தூத்துக்குடி: தமிழகத்தின் பல பகுதிகளில் 2வது நாளாக நேற்றும் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதாலும், போலீஸ் பாதுகாப்பு குறைவாக இருந்ததாலும், பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் காலை அரசு, தனியார் பேருந்துகள் குறைந்த அளவில் இயங்கின. மாலையி்ல் பஸ்கள் மீது கல் வீசப்பட்டதால் பஸ் போக்குவரத்து மறுபடியும் முடங்கியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் அதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பல இடங்களில் பஸ் மறியல், ரயில் மறியல் உள்ளிட்டவைகளும் நடந்தன. பல இடங்களில் அதிமுகவினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் சில பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மாலையில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் முக்கிய ஊர்களுக்கும், கிராமபுறங்களுக்கும் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவியாய் தவித்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் இரவு நேரங்களில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் பஸ் இயக்கம் படிப்படியாக தொடங்கியது.
அரசு பஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயக்கப்பட்டன. தனியார் பஸ்களும் வழக்கம்போல் ஓடின. கடைகளும் வழக்கம் போல் திறந்திருந்தன.
ஆனால் மாலை நெல்லையிலிருந்து புதுக்கோட்டை சென்ற பஸ் மீது அங்கிருந்த அதிமுகவினர் கல் வீசி தாக்கியதால் பஸ் கண்ணாடி சுக்கு நூறாக நொருங்கியது. இதில் டிரைவர் மீதும் கல் பட்டதால் அவர் காயம் அடைந்தார்.
இதனால் போக்குவரத்து அதிகாரிகள் டிரைவர், கண்டக்டர்கள் பஸ்சை திருப்பி கொண்டு வரும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். இதன் காரணமாக மீண்டும் போக்குவரத்து முடங்கியது.
இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைமை காணப்பட்டது. அதேசமயம் கடைகள் பெரும்பாலான இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அதிமுகவினர் போராட்டம் காரணமாகவும், பலர் எதற்கு வம்பு என்று கடைகளைத் திறக்காத நிலையும் காணப்பட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications