தமிழக - கர்நாடக எல்லைகளில் 24-வது நாளாக போக்குவரத்து முடக்கம்.. பொதுமக்கள் அவதி
ஒசூர்: காவிரி பிரச்சினை காரணமாக தொடர்ந்து 24வது நாளாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டுள்ளது. இரு மாநிலப் பேருந்துகளும் இயங்காததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து பெங்களூரில் வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தமிழர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே தமிழக, கர்நாடக எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சரக்கு வாகனங்களும் கர்நாடகா மாநிலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 24 நாட்கள் ஆகியும் பேருந்துகள் இயக்கப்படாததால் தொடர்ந்து மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் ஜூஜூவாடி வரையும், கர்நாடகத்தில் இருந்து வரும் பேருந்துகள் அத்திபள்ளி வரையும் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் இடைப்பட்ட தூரத்தை மக்கள் நடந்தே கடந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டுமே மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி செல்வோரும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!











Click it and Unblock the Notifications