வலையில் சிக்கிய அரிய வகை மீன்கள்: நாட்டு படகு மீனவர்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல்பகுதியில் நாட்டு படகு மீனவர்கள் வலையில் அரிய வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீன்களும் மிகப்பெரியவைகளாக இருப்பதால் அதிக விலை கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி மே மாதம் 29ம் தேதி வரை ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க விசைப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல படகுகளில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. சில படகுகள் கடல் அலைகளில் இழுத்து செல்லாமல் இருக்க பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழில் நடக்காததால் மீன்வரத்து குறைவாக உள்ளது. மாவட்டத்தில் நாட்டு படகு மற்றும் கட்டு மரங்களில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து திரும்புகின்றனர்.
நாட்டுப்படகுகளில் மீன்பிடி
தூத்துக்குடி மாவட்டத்தில் திரேஸ்புரத்தில் அதிக அளவில் நடக்கும் இந்த தொழிலுக்கு அடுத்தபடியாக தருவைகுளத்தில் தான் அதிக அளவில் தொழில் நடக்கும். இந்த நிலையில் தற்போது இந்த பகுதியில் நாட்டு படகுகள், கட்டு மரங்கள், வள்ளங்கள் மூலம் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
நகரை, ஊழி மீன்கள்
தற்போது இந்த பகுதியில் உள்ள கடலில் நல்ல மீன்கள் அதிகமாக கிடைப்பதாக மீனவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். இதில் பாலகண், மயில் மீன், பறவை மீன், முரல் மீன், மஞ்சக்கனி, வாளை மீன், நகரை, ஊழி, ஓரா, சீலா, திருக்கை வால் உள்ளிட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன.
நண்டுகள்
இந்த பகுதி நண்டுகளுக்கு புகழ் பெற்ற பகுதி என்பதால் தற்போது அங்கு நண்டுகளும் பிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரிய வகை மயில் மீன்களும் சிக்குவதால் மீனவர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
பெரிய மீன்கள் நல்ல விலை
இந்த மீன்கள் ஒவ்வொன்றும் சுமார் 30 முதல் 50 கிலோ வரை இருக்கின்றன. இந்த மீன்களுக்கு ஓரளவுக்கு நல்ல விலை கிடைப்பதால் அந்த பகுதி நாட்டு படகு மீனவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
தடைக்காலத்தில் மீன்கள்
மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன் வளம் பெருகி தற்போது அதிக அளவில் மீன்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications