Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழிலதிபர் மர்மச் சாவு: அழுகிய நிலையில் காரில் இருந்து சடலம் மீட்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, நெற்குன்றத்தில் காரில் மர்மமான அழுகிய நிலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை போலீசார் மீட்டுள்ளனர்.

கோயம்பேடு நெற்குன்றம் அருகேயுள்ள மேட்டுக்குப்பம் பாலவிநாயகர் நகர் ஜீவா குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரா.செல்வமணி (35), அம்பத்தூரில் அலுமினிய பேப்ரிகேஷன் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.

Business man found dead inside car in chennai

இந்த நிலையில், மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரை ஜெயந்தி கண்டித்தபோது, இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செல்வமணி வீட்டில் இருந்த காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில் கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து, செல்வமணியைத் தேடி வந்தனர்.

இதற்கிடையே பாலவிநாயகர் நகர் காமராஜர் தெருவில் கடந்த சில நாட்களாக கேட்பாரற்று நின்றிருந்த காரில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அங்கு சென்றனர். அப்போது, செல்வமணி அழுகிய நிலையில் சடலமாக கிடப்பது தெரியவந்தது.

உடனே போலீஸார் சடலத்தை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரின் ஏ.சி.யில் இருந்து வெளியான விஷவாயுவை சுவாசித்ததால் அவர் இறந்தாரா அல்லது அதிக மதுபோதையின் காரணமாக இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+