For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மோசமாக இருந்தது.. சி.ஆர். சரஸ்வதி திடீர் பல்டி

ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மிகவும் மோசமாக இருந்தது என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி திடீநென பல்டி அடித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் உடல்நிலை ஓராண்டாகவே மிகவும் மோசமாக இருந்தது என்று தினகரன் ஆதரவாளர் சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா இறப்பு குறித்து சமீபகாலங்களாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறி வந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அவர் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை யாரும் சந்திக்கவில்லை.

C.R. Saraswathi says about Jayalalitha's health

ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தினர் என்ன கூறினார்களோ அதைத்தான் நாங்கள் ஊடகங்களுக்கு கூறினோம். நாங்கள் பொய் கூறியதற்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கருத்து குறித்து தினகரனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், நைட்டி போட்டபடி உடல் இளைத்த நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்களும், வீடியோ எங்களிடம் உள்ளது. அதை தேவைப்படும் போது எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுப்போம்.

ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது, சிபிஐ மட்டுமல்ல, இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார் என்றார். இதுகுறித்து தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. இறுதியாகதான் அவர்ம அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் நன்றாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்றெல்லாம் கூறியவர் சி.ஆர்.சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
C.R.Saraswathi says that Jayalalitha's health condition was very bad for 1 year. She was admitted in last stage in Apollo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X