சசிகலாவின் "சொத்து" சி.ஆர். சரஸ்வதிதான்.. அன்று அப்பல்லோ வாசலில், இன்று குளோபல் கேட்டில்!
நடராஜனை சந்திக்க வந்த சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார் அதிமுகவின் சிஆர் சரஸ்வதி.
சென்னை: கணவர் நடராஜனை சந்திக்க வந்த சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார் அதிமுகவின் சிஆர் சரஸ்வதி. முன்பு அப்பல்லோவில் காத்துக் கிடந்த சரஸ்வதி தற்போது குளோபல் மருத்துவமனையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் கணவர் நடராஜன் பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரை காண்பதற்காக சசிகலாவுக்கு பரோல் கிடைத்து நேற்று அவர் சென்னை வந்து சேர்ந்தார். இன்று நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் வாசலில்...
சசிகலாவின் வருகையையொட்டி அவரை காண்பதற்காக தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்தார். அவர் காத்திருந்ததைப் பார்த்தபோது ஜெயலலிதாவுக்காக அப்பல்லோவில் அவர் காத்திருந்ததுதான் நினைவுக்கு வந்தது.

கருத்து சொன்ன சரஸ்வதி
அன்று அப்பல்லோ வாசலில் காத்திருந்த சி.ஆர். சரஸ்வதி அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகளை கூறி மக்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகினார். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார். உப்புமா சாப்பிட்டார். அவர் விரைவில் போயஸ் கார்டன் திரும்புவார் என்று கூறி வந்தார்.

காவிரி நீர் ஆலோசனை
ஜெயலலிதா காவிரி நீர் விவகாரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியாகவும் சி.ஆர்.சரஸ்வதி கூறினார். ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். இதன்பிறகு சசிகலாவுக்கு விசுவாசியாக இருந்த சி.ஆர். சரஸ்வதி தற்போது தினகரன் ஆதரவாளராக உள்ளார். இந்நிலையில் ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை, சசிகலா சொன்னதையே சொன்னோம் என்று அமைச்சர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரெட்டி கூறியதுதான்
இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதியிடம் கேட்டபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் போது நான் கூறவில்லை. அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, அவர் என்ன உணவு உட்கொண்டார் என்று மருத்துவர்கள் என்ன கூறினார்களோ அதைத்தான் நானும் கூறினேன் என்று ஒரே போடாக போட்டார்.

இன்று குளோபல் வாசலில்
அன்று அம்மாவுக்காக அப்பல்லோ வாசலில் காத்திருந்த சி.ஆர்.சரஸ்வதி, இன்று சசிகலாவுக்காக குளோபல் மருத்துவமனையில் அசராமல் காத்து கிடந்தார். இன்று வரை நெட்டிசன்களுக்கு மீம்ஸ்கள் கிடைக்க பஞ்சமில்லாத நிலையை ஏற்படுத்தியவர் சரஸ்வதி. அதேசமயம், முப்பெரும் தேவியர்களில் கோகுல இந்திராவும், வளர்மதியும் எடப்பாடி அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரஸ்வதி மட்டும்தான் தொடர்ந்து சசிகலாவுக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்.
சசிகலா சேர்த்த நிஜ "சொத்து" சிஆர் சரஸ்வதியும், நாஞ்சில் சம்பத்தும் என்று கூட சொல்லலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications