ஆவேச வசனம் தேவையில்லை, ராஜினாமாவோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் - சி.ஆர். சரஸ்வதி
நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாம் என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் ஆவேச வசனம் பேசாமல் ராஜினாமா செய்தோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ கொண்டு வரலாமே என்று சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் நவநீதகிருஷ்ணன் ஆவேசமாக பேசியது குறித்து டிடிவி.தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியதாவது : ஆவேசமான வசனம் பேசுவதைவிட, ராஜினாமா செய்யலாம். அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.

மத்திய அரசோடு கைகோர்த்துக் கொண்டு நாடகம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்வதெல்லாம் மத்திய அரசுடன் இணைந்து கொண்டு நடத்தும் நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று சந்திரபாபு நாயுடு நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். அதைப் போலவே தமிழக முதல்வரும் துணை முதல்வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாமே.
நாளைக்குள் கெடு முடியும் நேரத்தில் உணர்ச்சிவசமாக பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுத்ததற்கு நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்கள், மக்கள் பிரச்னைக்காக நீதிமன்றத்திடம் முறையிடலாமே.
ஜெயலலிதாவை விட ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த சட்டநடவடிக்கையும் எடுத்துவிடவில்லை. நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை ஏன் வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications