முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்களை நேரில் சந்திக்காத ஜெ.- 'இண்டர்காமில்' மட்டுமே ஆலோசனை!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் அவசரம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்களுடன் ஜெயலலிதா நேரில் ஆலோசனை நடத்தாமல் இண்டர்காமில் மட்டுமே பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று நாள்தோறும் கூறப்படுகிறது.

ஆனால் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட 19 அமைச்சர்கள் நேற்று முகாமிட்டிருந்தனர்.
போயஸ் கார்டனுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று மாலை 3.30 மணிக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி என அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றனர். அனைவருடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் பன்னீர்செல்வம் உட்பட எவரையுமே ஜெயலலிதா நேரில் சந்திக்கவில்லை என்கிறது போயஸ் தோட்ட வட்டாரங்கள்.. பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களுடனும் இண்டர்காம் மூலம் மட்டுமே ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. அப்போது ஜெயலலிதாவின் குரல் சற்று தளர்ந்திருந்ததாகவும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் நாள்தோறும் ஜெயலலிதாவை சந்திக்க தொழிலதிபர்கள், பிரமுகர்கள் பலரும் முயற்சித்தாலும் காத்திருங்கள் என்ற பதில்தான் போயஸ் தோட்ட ஊழியர்களிடம் இருந்து வருகிறதாம்...
அம்மா எப்போ ரிட்டர்ன்ஸ்?
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications