மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது: நடிகர் கமலஹாசன்
சென்னை: மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆரோக்கியம் கருதியே நான் மாமிசம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன். மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள். ஒருகாலத்தில் நானும் மாட்டுகறி சாப்பிட்டவன் தான், ஆனால் இப்போது என்னை விட பெரிய உருவங்களை சாப்பிடுவது இல்லை.

பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு பின்னர் பூச்சிகள் உணவு மிகப்பெரிய வியாபாரமாகவும் ஆகலாம். சாப்பிட உணவே இல்லாமல் இங்கு பலர் இருக்கிறார்கள். யாருக்கும் மெனு கார்டு கொடுக்க வேண்டாம் ஆவேசமாக பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், சகிப்புத்தன்மை தொடர்பாக கலைஞர்கள் விருதை திருப்பி கொடுப்பது தவறு என்று நான் கூறியதை விமர்சனம் செய்கிறார்கள். விருதை திருப்பி கொடுப்பதால் சாதிக்கப் போகிறீர்கள்? இந்த விருதை எந்த அரசும் எனக்கு கொடுக்கவில்லை. அறிஞர்கள் பார்த்து கொடுத்தது, அது எனக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம், அதை ஒருபோதும் திருப்பி கொடுக்க மாட்டேன். பேச்சுரிமை பாதிக்கப்படும் என்றால் குரல் கொடுப்பேன்.
நாங்கள் எங்களது நற்பணிகளை செய்கிறோம், தொடர்ந்து அதை செய்ய விடுங்கள், இது வள்ளல்களின் கூட்டம். நாங்கள் அரசியல் சம்பந்தவட்டர்கள் அல்ல, அதை புரியாதவர்களும் அல்ல. இவ்வாறு கமலஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications