வர்லாம், வர்லாம் வா.. மிரட்டல் விடுப்போருக்கு தீபா 'தில்' அழைப்பு!
யாராவது உங்களை மிரட்டினார்களா என்ற கேள்விக்கு, என்னை யாரும் இதுவரை மிரட்டவில்லை. அதற்கு நான் பணியக்கூடிய ஆளுமில்லை என்றார் தீபா.
சென்னை: மிரட்டுவோர் வரலாம் என்று அழைப்புவிடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நிருபர்களுக்கு இன்று தனது இல்லத்தில் பேட்டியளித்தார் தீபா.
உங்களது வளர்ச்சியை தடுக்க காவல்துறை மூலம் தடை போடப்படுகிறதா என்ற நிருபர்கள் கேள்விக்கு தீபா பதிலளிக்கையில், எனது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை மூலம் தடை போடப்படுகிறது. சில தினங்கள் முன்பு, ஆர்.கே.நகரிலுள்ள அரசு பள்ளியில் மாணவர்களை சந்திக்க சென்றேன். கல்வி உபகரணங்கள் அளிக்கவே நான் சென்றேன். ஆனால் அதற்கும் தடை போடப்பட்டது என்றார் தீபா.

யாராவது உங்களை மிரட்டினார்களா என்ற கேள்விக்கு, என்னை யாரும் இதுவரை மிரட்டவில்லை. அதற்கு நான் பணியக்கூடிய ஆளுமில்லை. மிரட்ட வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால் தயவு செய்து முன்வரவும். வந்து மிரட்டவும். என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள்.? என்றார் அவர்.












Click it and Unblock the Notifications