ரயில்வே தேர்வில் முறைகேடுகள்... ஜூலை 2-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் - வேல்முருகன்
சென்னை: இந்திய ரயில்வே துறையில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 2ம் தேதி ஐ.சி.எப்.- தென்மண்டல ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2014-ம் ஆண்டு ரயில்வே துறை தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரயில்வே துறை என்பது ஏதோ வட இந்தியர்களுக்கே மட்டுமே சொந்தமானது என்பதைப் போல அனைத்து நியமனங்களிலும் முறைகேடுகள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 2-ந் தேதியன்று சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
கோரிக்கைகள்:
- தென்மண்டல ரயில்வே துறை மற்றும் ஐ.சி.எப். நிறுவனத்தில் 5,500 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் பல்வேறு காரணங்களின் பெயரில் 2,27,00 தமிழர் விண்ணப்பங்கள் முறைகேடாக நிராகரிக்கப்பட்டன. இப்படி தமிழர்கள் வெளியேற்றப்பட்டு 90% வடமாநிலத்தவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடான தேர்வின் மூலமான நியமனத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயிற்சி பணி முடித்த மாணவர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும்.
- பயிற்சி பணி முடித்த 6 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வரை ரயில்வே துறை ஆர்.ஆர்.சி. தேர்வை நடத்தக் கூடாது. இந்த மாணவர்களை பணியில் அமர்த்தலாம் என்ற பாஸ்ட் டிராக் கமிட்டி அறிக்கையை உடனே செயல்படுத்த வேண்டும்.
- 1998ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பயிற்சி பணி முடித்து வேலைக்கால காத்திருப்போரின் சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும்.
- தென்மண்டல ரயில்வே துறையில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரை மட்டுமே பயிற்சி பணிக்குத் தேர்ந்தெடுக்கவும் வேண்டும்.
- இந்திய அரசு நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட- பழங்குடியின- பிற்படுத்தப்பட்டவருக்கான ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்து
- ரயில்வே துறை தேர்வுகளில் வடமாநிலத்தவரே முறைகேடாக நியமனம் செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமே இத்தகைய தேர்வுகளை நடத்த வேண்டும்.
- ரயில்வே துறை மற்றும் ஐ.சி.எப். ஆகியவற்றில் இந்த மண்ணின் மைந்தர்களுக்கே ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும்
- தமிழ்நாட்டுக்குள் இயங்கும் ரயில்வே துறையை தமிழ்நாடு அரசுக்கே உரிமையாக்கிட வேண்டும்
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வரும் ஜூலை 2-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை 10 மணிக்கு ஐ.சி.எப்.- தென்மண்ட ரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருக்கிறது.
தமிழர் எழுச்சி இயக்கம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கிறது.
இப்போராட்டத்தில் ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து அனைத்து தமிழர்களும் தமிழர்தம் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications