ஆர்கே நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை... ராணிமேரி கல்லூரியில் ஆரம்பிக்கும் முன்பே தள்ளுமுள்ளு!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சென்னை ராணிமேரி கல்லூரியில் அனுமதித்த நேரத்திற்கு முன்பே வேட்பாளர்களின் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரியில் அனுமதித்த நேரத்திற்கு முன்பே வேட்பாளர்களின் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த வியாழக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

Candidates Agents argue with police tension in the Ranimeri college

இந்நிலையில் ஆர்கே நகரில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

இதற்காக வேட்பாளர்களின் முகவர்கள் ராணிமேரி கல்லூரியில் திரண்டுள்ளனர். அவர்கள் அனுமதித்துள்ள நேரத்திற்கு முன்பே உள்ளே நுழைய முயன்றனர்.

காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ராணிமேரி கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+