தமிழகத்துக்கு ரூ500 நோட்டு எப்போது? என ரகசிய அறிக்கை தாக்கல்: ஹைகோர்ட்டில் ரிசர்வ் வங்கி
ரூ500 நோட்டுகள் தமிழகத்துக்கு எப்போது கிடைக்கும் என வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்கிறது ரிசர்வ் வங்கி
சென்னை: தமிழகத்துக்கு புதிய ரூ500 நோட்டு எப்போது வரும் என ரகசிய அறிக்கை தாக்கல் செய்யவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளுக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை தரக் கோரி செஞ்சி விவசாயி ராமமூர்த்தி தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் போது ரிசர்வ் வங்கி சார்பில் வழக்கறிஞர் மோகன் ஆஜரானார். அவர் கூறுகையில், பாதுகாப்பு காரணங்களால் தமிழகத்துக்கு எப்போது புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என சொல்ல முடியாது; இது தொடர்பாக ரகசிய அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்றார்.
இதனை ஏற்ற நீதிபதி கிருபாகரன், ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு சரியாக செயல்படவில்லை என்றும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தெளிவாக திட்டமிட்டு மேற்கொண்டிருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications