திண்டுக்கல் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் ஷாலினி என்று பெண் பரிதாபமாக பலியாகி உள்ளார்.
Recommended Video

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில் ஷாலினி என்று பெண் பரிதாபமாக பலியாகி உள்ளார். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள,பள்ளபட்டியில் வசிக்கும் அங்கையர்கரசி, சென்னையில் பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரை பார்க்க அவரது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் ஷாலினி, ராம்குமார், சதீஸ், கோகுல், பிரபுராஜ் ஆகியோர் பள்ளபட்டி வந்து சந்தித்து விட்டு, சென்னை திரும்பி இருக்கிறார்கள்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் பொட்டிகுளம் அருகில் வந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து இடது புற பள்ளத்தில் விழுந்து இருக்கிறது. அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஷாலினி என்ற பெண் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.அந்த பெண்ணின் பிறந்த நாளும் இன்றுதான்என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications