காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கார் கவிழ்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!- வீடியோ
திருப்பூர்: காங்கேயம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காங்கேயம் திட்டுப்பாறை பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காரில் சென்ற ரங்கநாதன், ஜோதி, குழந்தை ஜெனிதா, லட்சுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications