கார் கண்ணாடியை உடைத்து தங்க, வைர நகைகள் கொள்ளை- மதுராந்தகத்தில் பரபரப்பு
காஞ்சிபுரம்: மதுராந்தகத்தில் கார் கண்ணாடியை உடைத்து தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டச் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ரகு என்பவர் தனது தாயார் மற்றும் சகோதரனுடன் தனது சொந்தக் காரில் லால்குடிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அச்சிறுபாக்கம் அருகே உணவகம் ஒன்றின் முன்பு காரை நிறுத்தி விட்டு உணவருந்த சென்றனர். அப்போது கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள், ஒன்றரை சவரன் வைர நகை, 6 சவரன் தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த இரண்டு செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து ரகு அச்சிறுப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த பகுதியில் வாகன வழிப்போக்கர்களிடம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.