சரக்கு ஏற்றி வந்த லாரி மீது மோதிய கார் - லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்
வேலூர்: வேலூரில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மேல் கார் ஒன்று மோதிய பயங்கர விபத்தில் லாரி ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் காயங்களுடன் பயணிகள் உயிர் பிழைத்தனர்.
வேலூர் மாவட்டம், சென்னை - கோழிக்கோடு தேசியநெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி பெங்களுரூ நோக்கி சென்றுக்கொண்டுயிருந்தது. அந்த லாரி ஆம்பூர் அடுத்த சின்னகொம்மேஸ்வரம் பகுதியைதாண்டி செல்லும் போது லாரியின் டயர் திடீரென வெடித்துள்ளது. டயர் வெடித்ததும் லாரிதடுமாற்றத்துடன் ஓட ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் லாரியை நிறுத்தியுள்ளார்.
டயர் வெடித்து லாரி தடுமாறியபோது பின்னால் வேகமாகவந்த கார் ஓட்டுநர் பதட்டத்தில் தடுமாறிவிட நின்ற லாரி மீது மோதியது. இதில் காரில்இருந்த 3 பேர் பலத்த காயம்பட்டனர். இது பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் கிராமத்தினர் பார்த்துவிட்டு ஓடிவந்து அவர்களை காப்பாற்றி 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவிசெய்துக்கொண்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications