திருநங்கைகள் பற்றி எப்படி இப்படி கூறலாம்? குஷ்புவிற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு
மதுரை: திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறிய கருத்துக்களுக்கு எதிராக திருநங்கை பாரதி கண்ணம்மா சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் திருநங் கைகள் அரசியலில் ஈடுபடுவது குறித்து சில கருத்துகளை கூறியி ருந்தார். இந்த கருத்து திருநங் கைகள் மனதை புண்படுத்தியதாகக் கூறி அவர்களில் பலர் எதிர் கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்தியன் டிரான்ஸ்ஜெண்டர் இனிசியேட்டிவ் அமைப்பின் தலைவர் திருநங்கை சுதா, சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா ஆகியோர் தலைமையில் திருநங்கைகள் பலர் நேற்று காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு கடந்த வாரம் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருநங்கைகள் அமைப்பின் தலைவி பாரதி கண்ணம்மா, மதுரை மாவட்ட 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனால் குஷ்புவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications