கரூர்: அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய இந்து முன்னணி கட்சியினர் 3 பேர் மீது வழக்கு
கரூரில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இந்து முன்னணி கட்சியினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்: அரசு பேருந்து நடத்துனரை தாக்கி, அவரது கையில் இருந்த பண பையையும் பறித்து கொண்டு பணி செய்யவிடாமல் தடுத்த 3-இந்து முன்னணி கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்து முன்னனியினர் 3 பேர் கரூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செல்லும் அரசு பேருந்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர். அப்போது, நடத்துனரிடம், கரூர் மாவட்டம் சின்னதாரபுரம் அருகே உள்ள சூடாமணியில் இறங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு நடத்துனர், எங்கள் பேருந்துக்கு அங்கே நிறுத்தம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் அம்மூவரும் சின்னதாராபுரத்திற்கு டிக்கெட் எடுத்து கொண்டு பயணித்து, சின்னதாராபுரம் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர். அத்துடன், அவரை தாக்கிய பண பையையும் பறித்து கொண்டு அவரது பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமுற்ற நடத்துனர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி கட்சியை சேர்ந்த மூவர் மீது தற்போது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications