நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை.. இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு
தமிழக மீனவரை நடுக்கடலில் சுட்டுக் கொன்ற இலங்கை படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரும்: தமிழக மீனவரை நடுக்கடலில் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது மண்டபம் கடலோர காவல் படை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதம்பாலம் என்ற பகுதியில் நேற்றிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டுவிட்டு இரவோடு இரவாக மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பினர்.
பிரிட்ஜோவின் உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி முடித்தது. பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்ஜோவுடன் சென்ற அருள் கிளிண்டன் என்பவர் மண்டபம் கடலோர காவல் படையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது மண்டபம் கடலோர காவல் படை.












Click it and Unblock the Notifications