வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேச்சு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
நெல்லை: வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு நெல்லை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுனில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா பேசுகையில், ஜெயலலிதா எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எல்லாம் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்.

அதில் ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. இங்கு பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஏமாற்றுகிறார்கள்.
மின்சார கட்டணம், பால் கட்டணம், பஸ் கட்டணம், சாலை வசதிகள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, வீட்டுச்செலவு என ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவாகிறது. எனவே அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ பணம் தந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வாங்குங்கள் இவ்வாறு பிரேமலதா பேசினார். இதுகுறித்து தேர்தல் அதிகாரியான தாசில்தார், மரகதநாதன், நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வீடியோ காட்சிகளை பார்த்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறைகளுக்கு எதிராக பேசியது உள்பட 3 பிரிவுகளில் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications