வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேச்சு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு
நெல்லை: வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் வகையில் பேசியதாக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு நெல்லை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி டவுனில் தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மகளிரணி தலைவர் பிரேமலதா பேசுகையில், ஜெயலலிதா எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. எல்லாம் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள்.

அதில் ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. இங்கு பொதுமக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் வந்தால் மட்டும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக ஏமாற்றுகிறார்கள்.
மின்சார கட்டணம், பால் கட்டணம், பஸ் கட்டணம், சாலை வசதிகள் இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, வீட்டுச்செலவு என ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக செலவாகிறது. எனவே அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ பணம் தந்தால் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கேட்டு வாங்குங்கள் இவ்வாறு பிரேமலதா பேசினார். இதுகுறித்து தேர்தல் அதிகாரியான தாசில்தார், மரகதநாதன், நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வீடியோ காட்சிகளை பார்த்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விதிமுறைகளுக்கு எதிராக பேசியது உள்பட 3 பிரிவுகளில் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications