கனிஷ்க் பூபேஷ்குமார் மீது அமலாக்கத்துறை, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு!
கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னை : சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சென்னையில் 14 வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ. 824 கோடி மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயினை சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் வைத்துள்ளது. பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவருடைய மனைவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் பூபேஷ் மீது சென்னை போலீஸ் மற்றும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான பூந்தமல்லியில் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை வாங்குவதாக ஒப்பந்தம் போட்டு, அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் ரூ. 42 கோடி பெற்றுள்ளார் பூபேஷ்குமார் ஜெயின். இந்த நிலத்தின் மீது கடன் வாங்கியது குறித்து உரிமையாளர் புகழேந்திக்கு அண்மையில் தெரிய வந்ததையடுத்து அவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து பூபேஷ்குமார் ஜெயின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபிஐ தொடர்ந்த வங்கி மோசடி வழக்கு ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications