சென்னை துறைமுகம் வந்த கப்பல்.. அதுவும் சீனாவிலிருந்து.. உள்ளே பார்த்தால்.. ஆடிப்போன அதிகாரிகள்!
Recommended Video
சென்னை: சீனாவிலிருந்து சென்னைக்கு வந்த கப்பலில், அழையாத விருந்தாளியாக, ஒருவர் உட்கார்ந்திருந்தார்.. இதைப் பார்த்த மொத்த அதிகாரிகளும் ஆடிப்போய்விட்டனர். ஒருவழியாக இப்போதுதான் துறைமுகத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாம்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோரை அந்த வைரஸ் பலிவாங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அனைத்து நாடுகளுமே உஷாராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உஷார் நிலை
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகளுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.

பூனை
கப்பல் போக்குவரத்திலும் கெடுபிடிகள் உள்ளன. சீனாவில் இருப்பவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இப்படியாக தீவிர சோதனைகள் நடத்தப்படும் நிலையில்தான், அழையாத விருந்தாளியாக ஒரு பூனை சீனாவிலிருந்து கப்பலின் கண்டெய்னர் வழியாக சென்னை வந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த அந்த கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்ததும் அதில் இருந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தபோதுதான் இது தெரியவந்தது.

பீதி
பொம்மைகள் நிரப்பப்பட்டிருந்த ஒரு கண்டெய்னருக்குள், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று உயிருடன் இருப்பதை பார்த்த அதிகாரிகள், அப்படியே ஷாக்காகிவிட்டனர். பூனை வழியாக கொரோனா வைரஸ் பரவிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அங்கிருந்தோரிடம் தொற்றிக் கொண்டது. இதையடுத்து, உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீவிர சோதனை
சுகாதாரத்துறை அதிகாரிகள், மாஸ்க் அணிந்தபடி, விரைந்து வந்தனர். அந்த பூனைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தனர். நல்லவேளையாக, பூனைக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கான முதல்கட்ட அறிகுறி எதுவும் இல்லை. அதேநேரம், பூனையை யார் அனுப்பினார்கள், ஏன் அனுப்பினார்கள் என்பது தெரியாததால், சந்தேகம் நீடிக்கிறது. எனவே, பூனையை வெளியில் எங்கும் விடாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications