சென்னை மருத்துவமனையில் தந்தையை கொல்ல முயன்ற பெண் டாக்டர்: பகீர் வீடியோ
சென்னை: சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தந்தையை பெண் டாக்டர் ஒருவர் கொலை செய்ய முயன்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ராஜகோபால்(82). முன்னாள் டாக்டர். அவரது மகன் ஜெயபிரகாஷ் மற்றும் மகள் ஜெயசுதா ஆகியோரும் டாக்டர்கள். ஜெயபிரகாஷ் கீழ்ப்பாக்கத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராஜகோபாலுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதய கோளாறு
ராஜகோபால் இதய கோளாறு காரணமாக ஜெயபிரகாஷின் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவரை ஜெயசுதா தனது இரண்டு மகன்களுடன் பார்க்க வந்துள்ளார்.

ஜெயசுதா
தந்தையை மிரட்டி சொத்துப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய சுதா, அவரின் கட்டை விரலை பிடித்து மையில் அழுத்தி கைரேகையையும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு ராஜகோபாலுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகளின் டியூப்களை பிடுங்கிவிட்டு சென்றுவிட்டார்.

சிசிடிவி
ஜெயசுதாவின் வெறிச் செயல் அந்த அறையில் இருந்த சிசிடிவில் கேமராவில் பதிவாகியிருந்தது. வீடியோவை பார்த்த ஜெயபிரகாஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசில் புகார் செய்ததுடன் வீடியோவையும் ஒப்படைத்தார்.
மரணம்
ஜெயசுதா உயிர் காக்கும் கருவிகளின் இணைப்பை துண்டித்துவிட்டும் ராஜகோபால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துக் கொண்டார். அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரணம் அடைந்தார்.












Click it and Unblock the Notifications