காவிரி.. 15 வருடத்திற்கு கர்நாடகாவால் ஒன்னும் செய்ய முடியாது.. துரைமுருகனுக்கு எடப்பாடி பதில்
Recommended Video

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று, சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் நடைபெற்றபோது திமுக சார்பில் எதிர்க்கட்சி துணை தலைவர், துரைமுருகன் எழுந்து, கர்நாடக அனைத்து கட்சி கூட்டத்தில் காவிரி தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசும், காவிரி தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக பிரதிநிதிகளை அழைத்து பேசி எவ்வாறு செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளேன். நமது மூத்த வழக்கறிஞர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
காவிரி ஆணையம் எவ்வாறு செயல்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்போம். அதை பொறுத்து, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யலாம்.
காவிரி தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு 15 ஆண்டுகள் வரை பொருந்தும். சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் பேசி தீர்க்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications