'ஏன் இந்த பேதம்..?’... "காவிரி" தொடர்பாக வைரலாகும் ‘மம்முட்டி’ பேசிய வீடியோ #cauvery
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகா- தமிழகம் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இருமாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் கன்னட அமைப்புகளின் போராட்டங்களால் பீதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் காணப்படுகிறது.
தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. இதனால் எல்லையிலேயே பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2002ம் ஆண்டு வெளியான கார்மேகம் படத்தில் மம்மூட்டியும், வினுசக்ரவர்த்தியும் பேசும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
காவிரி பிரச்சினை தலை விரித்தாடும் இந்த சூழ்நிலையில் நீர் பங்கீடு குறித்து மம்மூட்டி பேசும் அந்த வசனங்கள் சாட்டையடியாக உள்ளது.
நீங்களும் பாருங்களேன்...












Click it and Unblock the Notifications