காவிரி பிரச்சனை: புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. நாராயணசாமி அறிவிப்பு
காவிரி பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருக்க வேண்டும் என புதுவை முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: காவிரி பிரச்சனை தொடர்பாக தேவைப்பட்டால் புதுவையிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நவம்பர் 19ம் தேதி அன்று புதுச்சேரி மாநிலம் நெல்லித் தோப்பு தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

எம்எல்ஏ ஆகாமல் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி 6 மாதத்திற்கு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, நாராயணசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஜான்குமார் ராஜினாமா செய்தார். இந்நிலையில், இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நெல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.
நெல்லித் தோப்பு இடைத் தேர்தலில் வெற்றி பெற தீவிர பிரச்சாரத்தில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டுள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நாராயணசாமி செய்தியாளர்களிடம், தமிழக அரசு காவிரி பிரச்சனை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் தேவைப்பட்டால் புதுச்சேரியிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு முடிவு எட்டப்படும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications