மோடி காவிரியை அல்ல நைல் நதி பிரச்சனையை மட்டும் தான் தீர்ப்பாரோ?: ராமதாஸ்
சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார் என்றால் நைல் நதி பிரச்சனையை மட்டும் தான் தீர்ப்பாரோ என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா, தமிழகம் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. தமிழக-கர்நாடக எல்லையில் கடந்த சில நாட்களாகவே பதட்டமாக உள்ளது.
இந்நிலையில் காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட மாட்டார் என்றும், இதில் நீதிமன்ற தீர்ப்பே இறுதி என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மத்திய அமைச்சர் நிர்மலா - நைல் நதி பிரச்சினையை மட்டும் தான் தீர்ப்பாரோ?
காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிட மாட்டார்: மத்திய அமைச்சர் நிர்மலா - நைல் நதி பிரச்சினையை மட்டும் தான் தீர்ப்பாரோ?
— Dr S RAMADOSS (@drramadoss) September 19, 2016
காவிரி சிக்கலில் நீதிமன்ற தீர்ப்பே இறுதி: நிர்மலா சீதாராமன்-அப்படியானால், நீதிமன்றத்துக்கு இணையான நடுவர் மன்ற தீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை?
காவிரி சிக்கலில் நீதிமன்ற தீர்ப்பே இறுதி: நிர்மலா சீதாராமன்-அப்படியானால்,நீதிமன்றத்துக்கு இணையான நடுவர் மன்றதீர்ப்பை ஏன் செயல்படுத்தவில்லை?
— Dr S RAMADOSS (@drramadoss) September 19, 2016