கர்நாடகாவை உடனே ரிலீஸ் செய்ய சொன்ன அந்த 4 டிஎம்சி தண்ணீர் என்ன ஆச்சு?
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
Recommended Video

டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. 4 டிஎம்சி கொடுக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இன்று அது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இன்னும் வாரியம் அமைக்கவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் இன்றைய விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.

இன்றைய விசாரணையில் எப்போதும் போல தமிழகத்தை வஞ்சித்து மத்திய அரசு மேலும் கால அவகாசம் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும், மே 14ம் தேதி அன்று வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவகாசம் கொடுத்துள்ளது.
கடந்த விசாரணையில் தமிழகத்திற்கு மே மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அறிக்கை அளித்தது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தது.
ஆனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியதற்கு உச்ச நீதிமன்றம் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. உச்ச நீதிமன்றம்தான் தண்ணீர் கொடுக்கவில்லை என்றால் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தது. எனவே, இன்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நெருக்கடி தரும் என தமிழகம் எதிர்பார்த்தது. அப்படி எதுவும் நடக்வில்லை.
தமிழக அரசின் வாதத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் தமிழக தரப்பு இன்னும் அழுத்தமாக வாதம் முன்வைத்து உரிமையை வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கருத்தாக உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications