சிக்காத ஆதாரம்... நிர்மலா தேவியின் போலீஸ் காவலை நீட்டிக்க சிபிசிஐடி விருப்பம்!
பேராசிரியை நிர்மலாதேவியின் போலீஸ் காவல் நாளையோடு முடிவடையும் நிலையில் மேலும் 10 நாட்கள் காவல் கோர சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலா தேவியின் போலீஸ் காவலை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து கேட்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர். நிர்மலா தேவி மீண்டும் போலீஸ் காவலில் செல்வதற்கு முன்னர் சந்தானம் குழு அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று பார்த்தால், இதுவரை விசாரணை மட்டுமே நடக்கிறதே தவிர எந்த பெருச்சாளியும் வெளியே வந்ததாக தெரியவில்லை. நிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் உதவி பேராசிரியர் முருகன், கருப்பசாமியோடு விசாரணை வளையம் நிற்கிறது.

22 மணி நேர விசாரணைக்குப் பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டு அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கருப்பசாமி இன்று வரை தலைமறைவாகவே இருக்கிறார். இந்நிலையில் நிர்மலாதேவியை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு நீதிமன்றம் அளித்த காவல் நாளையோடு முடிவடையும் நிலையில், அவரை மீண்டும் நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர் சிபிசிஐடி போலீசார்.
அப்போது மேலும் 10 நாட்கள் கஸ்டடி கேட்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே நிர்மலாதேவி மீண்டும் போலீஸ் கஸ்டடிக்கு செல்வதற்கு முன், அவரிடம் விசாரணை நடத்திட வேண்டும் என ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணை கமிஷன் திட்டமிட்டுள்ளது. எனினும் சந்தானம் கமிஷனுக்கு நேரடியாக நிர்மலாதேவியை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்பதால் அவர்கள் நீதிமன்ற அனுமதியுடனே இந்த விசாரணையை நடத்த முடியும் என்ற நிலையும் நிலவுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications