கோவையில் குடும்ப பிரச்சினையால் பெண் காவலர் பிரியா தூக்கு போட்டு தற்கொலை
ரயில்வே காவல் நிலைய பெண் காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: கோவையில் பெண் காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
கோவை ரயில்வே காவல் நிலைத்தில் பெண் காவலராக பணிபுரிந்தவர் பிரியா. 2013-ம் ஆண்டு முதல் இந்த பணியில் ப்ரியா இருந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏழு மற்றும் இரண்டரை வயதில் குழந்தைகள் உள்ளனர்.காவலர் குடியிருப்பு வளாகத்திலேய இவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனால் இவருக்கு நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று கணவர் நவநீதிகிருஷ்ணனுடன் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பிரியா தூக்கு போட்டு இன்று தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பிரியாவின் தற்கொலை குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.












Click it and Unblock the Notifications