அதிகார துஷ்பிரயோகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சோதனை செய்த சிபிஐ, குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். இன்று ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீடு மற்றும் அவரது அலுவலகம் உட்பட, அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாகவும், குற்றவியல் சதி செய்ததாகவும் கூறி, 120பி பிசி சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜெயந்தி நடராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 120பி, 13(2), 13/1 (டி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் ஜெயந்தி நடராஜன்.
சட்டவிரோதமாக வனத்துறை நிலத்தை குத்தகைக்கு விட அனுமதி கொடுத்ததாக ஜெயந்தி மீது புகாராகும். எலக்டோஸ்டீல் காஸ்டிங் நிறுவன முன்னாள் எம்.டி. உமங் கெஜ்ரிவால் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயந்தி நடராஜன் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது சுற்றுசூழல் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததற்கு லஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் லோக்சபா தேர்தலின் போது ஜெயந்தி வரி திட்டங்களால் வளர்ச்சி முடங்கியுள்ளது என்றும் மோடி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications