அதிகார துஷ்பிரயோகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சோதனை செய்த சிபிஐ, குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பொழுது மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். இன்று ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீடு மற்றும் அவரது அலுவலகம் உட்பட, அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் பதவியை தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாகவும், குற்றவியல் சதி செய்ததாகவும் கூறி, 120பி பிசி சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இன்று சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் ஜெயந்தி நடராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றச் சதி மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 120பி, 13(2), 13/1 (டி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் ஜெயந்தி நடராஜன்.
சட்டவிரோதமாக வனத்துறை நிலத்தை குத்தகைக்கு விட அனுமதி கொடுத்ததாக ஜெயந்தி மீது புகாராகும். எலக்டோஸ்டீல் காஸ்டிங் நிறுவன முன்னாள் எம்.டி. உமங் கெஜ்ரிவால் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயந்தி நடராஜன் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது சுற்றுசூழல் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததற்கு லஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். மேலும் லோக்சபா தேர்தலின் போது ஜெயந்தி வரி திட்டங்களால் வளர்ச்சி முடங்கியுள்ளது என்றும் மோடி விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications