ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்.... ரூ2,000 நோட்டு விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்பிஐ!
சேகர் ரெட்டியிடம் இருந்து பிடிபட்ட புதிய ரூ2,000 நோட்டு குறித்த எந்த விவரமுமே தங்களிடம் இல்லை என கைவிரித்துவிட்டது ஆர்பிஐ.
Recommended Video

சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணப் பதுக்கல் வழக்கு ஊற்றி மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள் குறித்து தங்களிடம் எந்த விவரமுமே இல்லை என அந்தர் பல்டி அடித்துவிட்டது ஆர்பிஐ.
தமிழக அரசின் பிரதான ஒப்பந்ததாரராக இருந்தவர் சேகர் ரெட்டி. முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி.

குவியல் குவியலாக தங்கம்
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நாடு முழுவதும் புதிய ரூ2,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டன. சென்னையில் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள், தங்க கட்டிகள் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டன.

விவரம் கேட்ட சிபிஐ
இவ்வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ2,000 நோட்டுகள் எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.

விவரமே இல்லையே
ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அப்படியே வங்கிகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மாதம் கழித்தே நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்தோம் என்கிற பணி தொடங்கியது. சிபிஐ குறிப்பிட்டுள்ள ரூ2,000 நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என கைவிரித்துவிட்டது.

சிபிஐக்கு கடும் பின்னடைவு
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் இனி மேல் நடவடிக்கை எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது. அனேகமாக சேகர் ரெட்டி மீதான வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
-
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications