ஊற்றி மூடப்படுகிறது சேகர் ரெட்டி கேஸ்.... ரூ2,000 நோட்டு விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ஆர்பிஐ!
சேகர் ரெட்டியிடம் இருந்து பிடிபட்ட புதிய ரூ2,000 நோட்டு குறித்த எந்த விவரமுமே தங்களிடம் இல்லை என கைவிரித்துவிட்டது ஆர்பிஐ.
Recommended Video

சென்னை: தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணப் பதுக்கல் வழக்கு ஊற்றி மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள் குறித்து தங்களிடம் எந்த விவரமுமே இல்லை என அந்தர் பல்டி அடித்துவிட்டது ஆர்பிஐ.
தமிழக அரசின் பிரதான ஒப்பந்ததாரராக இருந்தவர் சேகர் ரெட்டி. முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கும் மிக நெருக்கமானவர் சேகர் ரெட்டி.

குவியல் குவியலாக தங்கம்
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது நாடு முழுவதும் புதிய ரூ2,000 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக சோதனை நடத்தப்பட்டன. சென்னையில் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையில் ரூ33 கோடி மதிப்பிலான ரூ2,000 நோட்டுகள், தங்க கட்டிகள் பெருமளவு பறிமுதல் செய்யப்பட்டன.

விவரம் கேட்ட சிபிஐ
இவ்வழக்கில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட ரூ2,000 நோட்டுகள் எந்த வங்கி அல்லது குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.

விவரமே இல்லையே
ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அப்படியே வங்கிகளுக்கும் கிட்டங்கிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மாதம் கழித்தே நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பின்னர், ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்தோம் என்கிற பணி தொடங்கியது. சிபிஐ குறிப்பிட்டுள்ள ரூ2,000 நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் எதுவுமே இல்லை என கைவிரித்துவிட்டது.

சிபிஐக்கு கடும் பின்னடைவு
இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் இனி மேல் நடவடிக்கை எதுவும் செய்ய முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது. அனேகமாக சேகர் ரெட்டி மீதான வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications