டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கு- பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை!
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடலூரில் அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடலூர்: டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதைத்தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்சங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது.இதற்கு தடைவிதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் மனுவை விசாரித்து உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள் எஸ்பி பாலாஜி தலைமையில் இன்று விசாரணையை தொடங்கினர். கடலூர்-கோண்டூரில் உள்ள விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் இன்று விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணை நீடிக்கும் பட்சத்தில் விஷ்ணுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications