குட்கா வழக்கு.. டிஎஸ்பி மன்னர் மன்னன் உள்பட இருவருக்கு சம்மன்
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் துறை ஆய்வாளர் சம்பத் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் போதை பொருட்களான குட்கா விற்பனையை ஜெயலலிதா அரசு தடை செய்தது. இதையடுத்து சென்னை மாதவரத்தில் ஒரு கிடங்கில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2016-ஆம் ஆண்டு பெட்டி பெட்டியாக குட்கா பொருட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 35 இடங்களில் குட்கா தொடர்பாக சோதனை நடத்தினர். அப்போது தூத்துக்குடி சிப்காட் ஆய்வாளராக உள்ள சம்பத், மதுரை டிஎஸ்பியாக உள்ள மன்னர் மன்னன் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பத் மற்றும் மன்னர் மன்னனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. செங்குன்றம் காவல் ஆய்வாளராக இருந்த சம்பத் தூத்கதுக்குடி சிப்காட் ஆய்வாளராக உள்ளார்.
அதுபோல் டிஎஸ்பி மன்னர் மன்னன், புழல் காவல் உதவி ஆணையராக இருந்து தற்போது மதுரை ரயில்வே டிஎஸ்பியாக உள்ளார். குட்கா பொருட்களை மாதவரத்தில் உள்ள கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்ட போது புழல் காவல் உதவி ஆணையராக இருந்தவர் மன்னர் மன்னன்.
சம்பத் செங்குன்றம் ஆய்வாளராக பணியாற்றிய போதுதான் குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இவர்களுக்கு தெரியாமல் குட்கா கிடங்கு 2 ஆண்டுகள் செயல்பட்டது எப்படி என்பது குறித்து கேள்வி எழுப்பவே இவர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் சிபிஐ முன் ஆஜராக வாய்ப்புள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications