ராமேஸ்வரம் ரயிலில் சிசிடிவி கேமரா... பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக தெற்கு ரயில்வே நடவடிக்கை!
சென்னை: ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முதன் முறையாக சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளிடம் கொள்ளை, பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து சரியான ஆதாரங்கள் சிக்காத பட்சத்தில், குற்றவாளிகளைக் கைது செய்ய போலீசார் திணற வேண்டியுள்ளது.

எனவே, ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், கொள்ளை சம்பவங்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என முடிவு செய்யப் பட்டது.
இதன்படி, முதன் முறையாக சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கேமராவில் தெரியும் காட்சிகள் சென்னை ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள கம்ப் யூட்டருடன் இணைக்கப்பட்டு, பதிவும் செய்யப்படுகிறது.

இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தவுடன், அனைத்து ரயில்களிலும், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராப் பொருத்தப்படும் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் அசோக் குமார் அகர்வால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications