ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.400 க்கு விற்பனை!: கட்டுமானப்பணிகள் பாதிக்கும் அபாயம்
சென்னை: தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதால் கட்டுமானப்பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சிமெண்ட் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிமெண்ட் விலை மேலும் உயர்ந்துள்ளது.

இது குறித்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் சிமெண்ட் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: "தென்னிந்தியாவில் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு 130 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இது தற்போது பாதியாக குறைந்துவிட்டது. சிமெண்ட் தேவை குறைந்ததே இதற்கு காரணம். அரசு கொள்முதல் செய்யும் சிமெண்ட் அளவும் குறைந்துவிட்டது. இதனால், சிமெண்ட் ஆலைகளில் ஒரு மாதத்துக்கு 13 நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு மூட்டை சிமெண்ட் 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது சிறிது சிறிதாக விலையேறி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி 400 ரூபாயை எட்டியது.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ஆலைகள் தமிழக அரசுக்கு சிமெண்ட்டை குறைந்த விலைக்கு கொடுப்பதால், வெளிச் சந்தையில் எவ்வளவு விலை அதிகரித்து விற்றாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிமெண்ட் நிறுவனங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி வருகின்றன" என்றார்.
சிமெண்ட் தேவை
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக மாதம்தோறும் தேவைப்படும் சிமெண்ட்டின் அளவு தோராயமாக 17 லட்சம் மெட்ரிக் டன். இது போதாது என்று ஆந்திராவிலிருந்து சுமார் 4 மெட்ரிக் டன் சிமெண்ட் நமது தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஆந்திராவில் உற்பத்தியாகும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.100 வரை விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் சிமெண்ட் மூட்டை ரூ. 310 வரை கடந்த சில மாதங்களுக்கு முன் விலை உயர்ந்தது. விலை ஏற்றம் காரணமாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கொண்டுவரப்படும் சிமெண்ட்டின் அளவு 3 லட்சம் மெட்ரிக் டன்வரை குறைந்தது. இதனால் சிமெண்ட் கிடைப்பதில் சிறிது தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை ஏற்றியதாகக் கூறுகின்றனர்.
அம்மா சிமெண்ட்
தமிழகத்தில் அம்மா சிமெண்ட் என்ற பெயரில் மூட்டை ஒன்றுக்கு 190/- ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒருபக்கம் தமிழக அரசு குறைவாக விற்றாலும் வெளிமார்க்கெட்டில் சிமெண்ட் விலை மூட்டைக்கு, 100 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாககட்டுமானத் துறையினர் குமுறுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications