பொங்கல் விடுமுறை.. மத்திய அரசு அறிவிப்பில் தவறில்லை.. திருமாவளவன் சொல்கிறார்
பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பத தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறையை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளில் பொங்கல் வருவதால் அதனை கட்டாய விடுமுறை என அறிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பொங்கல் விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு நேற்று அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொங்கல் விடுமுறை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
சனி ஞாயிறு ஆகிய 2 நாட்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை என்பதால் அந்த விடுமுறை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக திங்கள்கிழமை கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அபேத்கர் பிறந்த நாளை கட்டாய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று கூறிய திருமாவளவன் இதனை பாரதிய ஜனதா கட்சி முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications