சோடா பாட்டில் வீசுவதை நல்ல அர்த்தத்தில்தான் ஜீயர் கூறியிருப்பார்.. பொன்னார் 'வக்காலத்து'
ஜீயர்களுக்கு சோடா பாட்டில் எல்லாம் வீசத்தெரியாது என்றும், அவர் அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்றும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
Recommended Video

சென்னை: ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார் என்றும் அதைத் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கட்டுரையை, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் வாசித்தபோது, ஆண்டாளை தேவதாசி என்று தெரிவித்ததாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைரமுத்து தனது கருத்துக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் உண்ணாவிரதம் இருந்தார். பின், பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் வைரமுத்து வந்து மன்னிப்புக் கேட்காவிட்டால் மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகக் கூறினார்.

இந்நிலையில், நேற்று வைரமுத்துவுக்குக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம், "எங்களுக்கு கல்லெறியவும் தெரியும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்" என்று கூறினார். வன்முறையைத் தூண்டும் விதமாக ஜீயரின் பேச்சு இருந்ததாக கூறி அவருக்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், "ஜீயர் சோடா பாட்டில் வீசுவதாக நல்ல அர்த்தத்தில் கூறியிருப்பார். அதைத் தவறாக நினைக்க வேண்டாம். ஆன்மீகப் பெரியார்கள் அப்படியெல்லாம் பேசமாட்டார்கள், அவர்களுக்கு பாட்டிலெல்லாம் வீசத்தெரியாது என்று கூறியுள்ளார்.
பாட்டில் வீசுவதில் என்ன நல்ல அர்த்தம் இருக்கிறது என்று செய்தியாளர்கள் யாரும் பொன்.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கேள்வி எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications