சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி போலீஸ் பாதுகாப்புடன் “கார் பார்க்கிங்” – ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் ஒப்பந்தப்பணி இறுதி முடிவு செய்யும் வரையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் கார் நிறுத்தும் இடத்துக்கு கட்டணத்தை போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு ரயில்வே நிர்வாகமே வசூலிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் கே.சுதன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கார் நிறுத்தும் இடத்தை சட்டவிரோதமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வாகனங்களை நிறுத்தும் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணத்தை சில சமூக விரோதிகள் வசூலிக்கின்றனர்.

இதை தட்டிக் கேட்டால் அவர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர். கார் நிறுத்தும் இடத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் தங்களது காரை நிறுத்த இடம் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால், வாகனத்தை நிறுத்துபவர்கள் சட்டவிரோத கும்பலுக்கு பெரும் தொகையை கொடுக்க வேண்டியுள்ளது.
எனவே, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தை ஒழுங்குபடுத்தவும், வாடகை கார்கள், ஆட்டோக்கள் ஆகியவைகள் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும் என்றும் சட்டவிரோதமாக வாகன நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து அதிக கட்டணத்தை வசூலிக்கும் கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம், தமிழக டி.ஜி.பி, ரயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அப்துல் முபீன் ஆஜராகி வாதிட்டார்.
இவ்வழக்கு விசாரணையை அடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புள்ள இடத்தில் பெரும் பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக பல மாதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் நிறுத்தம் இடத்தின் வரைபடம் எங்கள் முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "ஏ" என்று வரையறை செய்யப்பட்டுள்ள இடத்தில் 61 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்தம் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தப்பணி வழங்கப்பட்டு விட்டது.
மேலும், பிரிமீயம் கார் நிறுத்தம் இடத்தில் 48 கார்கள் நிறுத்த முடியும். இந்த கார் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வருகிற 22 ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்றும், ஒரு மாதத்துக்குள் இந்த ஒப்பந்த பணி நடவடிக்கை அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யும் வரை பிரிமீயம் கார் நிறுத்தம் பகுதியை தெற்கு ரயில்வே நிர்வாகமே கண்காணித்து கட்டணத்தை வசூலிக்கவேண்டும்.
இதற்காக அந்த ரயில்வே ஊழியர்களுக்கு, தமிழக போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு போலீசார் தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications