மாணவர்களுக்கு போதிய வசதி உள்ளதா... நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மத்திய குழு ஆய்வு
நெல்லை: நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு உரிய வசதிகள் உள்ளதா என மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.
நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி 32 ஆண்டுகள் பழமையானது. சித்த மருத்துவ இளங்கலை பட்டப்படிப்புக்கு இங்கு 100 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 இடங்களே உள்ளன. இது தவிர தமிழகத்தில் ஆயுர்வேதம், யுனானி யோகா போன்ற படிப்புகளுக்கு கல்லூரிகளிலும் நாகர்கோவில் கோட்டார், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.

இந்த கல்லூரிகளில் 2016-17 மாணவர்கள் சேர்க்கைக்காக கடந்த மாதம் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மட்டும் 800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் சேர்க்கைக்காக கலந்தாய்வு எப்போது நடக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் ஓவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக கல்லூரி பேராசிரியர் எண்ணிக்கை, வகுப்பறை எண்ணிக்கை. போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்வர். ஆய்வுக்கு பினனர் அவர்கள் தரும் அறிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி தரப்படும்.
இந்த மத்திய குழுவினர் இன்று நெல்லை சித்த மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு மேற்கொள்கின்றனர். அவர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்வர். பின்னர் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications