தமிழகத்தில் 90% கூடுதல் மழை பெய்யும் என மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் கண்டுகொள்ளாத ஜெ. அரசு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 90 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆயவு துறை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்தும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் தான் இந்த விபரீதம் என்று கூறப்படுகிறது.

வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது. மழை காலம் என்று தெரிந்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தான் இந்த விபரீதம் என்று புகார் எழுந்துள்ளது.

Centre warned TN of excess rain in October itself

அரசோ, எதிர்பார்க்காத வகையில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும், அதுவும் 111 சதவீதம் அதிகமாக பெய்யும்.

Centre warned TN of excess rain in October itself

தமிழகத்தில் வழக்கத்தை விட 112 சதவீதம் கூடுதல் மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கூடுதலாக 90 சதவீதம் வரை மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பற்றி சென்னையைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறுகையில்,

Centre warned TN of excess rain in October itself

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குகையில் இருந்த காரணிகளை ஆய்வு செய்கையில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யக்கூடும் என்பது தெரிய வந்தது. இது குறித்து ஊடகங்களில் அறிவித்தும் அதை ஆட்சியாளர்கள் எவ்வளவு முக்கியமாக கருதினார்கள் என்பது தெரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+