தமிழகத்தில் 90% கூடுதல் மழை பெய்யும் என மத்திய அரசு முன்கூட்டியே எச்சரித்தும் கண்டுகொள்ளாத ஜெ. அரசு?
சென்னை: இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 90 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆயவு துறை கடந்த அக்டோபர் மாதமே எச்சரித்தும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் தான் இந்த விபரீதம் என்று கூறப்படுகிறது.
வரலாறு காணாத மழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது. மழை காலம் என்று தெரிந்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் தான் இந்த விபரீதம் என்று புகார் எழுந்துள்ளது.

அரசோ, எதிர்பார்க்காத வகையில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மத்திய அரசின் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆண்டு தென்மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யும், அதுவும் 111 சதவீதம் அதிகமாக பெய்யும்.

தமிழகத்தில் வழக்கத்தை விட 112 சதவீதம் கூடுதல் மழை பெய்யக்கூடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கூடுதலாக 90 சதவீதம் வரை மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது பற்றி சென்னையைச் சேர்ந்த தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ் கூறுகையில்,

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்குகையில் இருந்த காரணிகளை ஆய்வு செய்கையில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்யக்கூடும் என்பது தெரிய வந்தது. இது குறித்து ஊடகங்களில் அறிவித்தும் அதை ஆட்சியாளர்கள் எவ்வளவு முக்கியமாக கருதினார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications