ஜெயலலிதாவுக்காக சோகம் காண்பித்து "சந்தோஷத்துடன்" கலைந்து சென்ற கருமேகங்கள்!
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தின் இன்று காலை பல பகுதிகளில் வானம் கருமேகக் கூட்டத்துடன் காணப்படுகிறது. ஜெயலலிதா தீர்ப்பால் வானமே சோகமாகக் காணப்படுகிறதோ என்று கூட மக்கள் நினைத்தார்கள். ஆனால் தீர்ப்பு வந்த பிறகு தற்போது மேகங்கள் கலைந்து வெயில் மெல்லத் தலை காட்டியிருக்கிறது.
வழக்கத்தை விட இந்தாண்டு கோடையின் கொடுமை சற்று முன்னதாகவேத் தொடங்கி விட்டது. கடந்த வாரம் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் மேலும் வெப்பம் அதிகரித்தது. தமிழகத்தின் பல பகுதிகள் கோடை மழையால் குளிர்ந்த போதும், சென்னைக்கு மட்டும் மழை பாராமுகமாகவே இருந்தது.

தொடர்ந்து வெயிலின் உக்கிரம் அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். அதிக வெயிலால் பகல் நேரங்களில் வெளியே செல்ல அஞ்சி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். பகலின் வெப்பம் இரவு நேரத்திலும் எதிரொலித்தது. இதனால் மக்கள் புளுக்கத்தில் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் கருமேகக் கூட்டத்துடன் காணப்பட்டது.. இதனால் சற்று குளிர்ந்த காற்று வீசியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் காணப்படும் கருமேகத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அதிமுகவினரைப் போலவே வானம் அதனைக் கொண்டாட அல்லது கதறித் தீர்க்கத் தயாராகிறதோ என மக்கள் கூட நினைத்தனர். எது எப்படியோ, அழுது தீர்த்தாலும் சரி, ஆனந்தக் கூத்தாடினாலும் சரி மழை பெய்தால் நல்லது என்பது தான் சென்னை மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால் தற்போது மேகங்கள் கலைந்து வெயில் வர ஆரம்பித்துள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications