ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக மார்க்சிஸ்ட் குற்றம் சாட்டியுள்ளது.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்தமாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தி வருகின்றனர். உடனடியாக இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, பணப்பட்டுவாடாவை தடுத்த நிறுத்த வேண்டும்' என்றார்.
மேலும் ஸ்ரீரங்கத்தில் அதிமுகவின் பண பலம், அதிகார பலம் ஓங்கியுள்ளதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications