சென்னைவாசிகளே மனதை தேத்திக்கோங்க: செம்பரம்பாக்கம் ஏரி நிறைய 4.5 அடி மட்டுமே உள்ளது!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி நிறைய இன்னும் 4.5 அடி மட்டும் தான் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையை பார்த்து எங்கே மீண்டும் வெள்ளம் வந்துவிடுமோ என்று மக்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப இன்னும் 4.5 அடிகள் தான் உள்ளது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,
தொடர்ந்து பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. அதில் தற்போது 19.43 அடி வரை நீர் உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து 1,190 கன அடிநீர் வருகிறது.
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 120 கன அடி நீர் செல்கிறது. கனமழை தொடர்ந்தால் ஏரி விரைவில் நிரம்பும் என்றனர்.












Click it and Unblock the Notifications