சென்னை விமான நிலையம் மீண்டும் இயங்க தொடங்கியது.... மத்திய அமைச்சர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் ஒருவார காலம் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம் இன்று முதல் முழுவீச்சில் இயங்க தொடங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விமான நிலையத்தை மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ இன்று பார்வையிட்டார்.

சென்னையை புரட்டிப் போட்ட கனமழை விமான நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. சென்னை விமான நிலைய ஓடுபாதையும் பல அடி உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது.

Chennai airport becomes fully operational

மேலும் பல விமானங்களை குப்பைகளைப் போல வெள்ளம் வாரி சுருட்டிக் கொண்டு போய் எங்கெங்கோ போட்டது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து தற்காலிகமாக பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை விமான நிலையம் இன்று காலை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை விமான நிலையத்தை மத்திய அமைச்சர் கஜபதி ராஜூ இன்று ஆய்வும் நடத்தினார்.

ஜெ.வுடன் கஜபதி ராஜூ சந்திப்பு

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவையும் தலைமைச் செயலகத்தில் கஜபதி ராஜூ இன்று சந்தித்தார். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார் கஜபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+